ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றுள்ள சிங்கப்பூர் வாட்சண்டை வீராங்கனை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு சிங்கப்பூர் வாட்சண்டை வீராங்கனை அமிதா பெர்த்தியர் தகுதிபெற்றுள்ளார்.

இரண்டாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடவுள்ளார் 23 வயது பெர்த்தியர். தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள பெர்த்தியர் புள்ளிக் கணக்கின்படி ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்றார்.

வாட்சண்டையில் பெண்கள் ஃபாய்ல் பிரிவில் பெர்த்தியர் உலகத் தரவரிசையில் 28வது இடத்தில் இருக்கிறார்.

உலகில் ஆகச் சிறநதீ நான்கு நாடுகளின் குழுக்கள் நேரடியாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெறும். அதற்குப் பிறகு ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஓ‌ஷினிய, அமெரிக்க, ஆப்பிரிக்க வட்டாரங்கள் ஒவ்வொன்றிலும் ஆகச் சிறந்த குழுக்கள் தகுதிபெறும்.

அதன் பிறகு குழுக்களில் இடம்பெற்றுத் தகுதிபெறாத ஆகச் சிறந்த வாட்சண்டை வீரர்கள் தனிநபர்களாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னேறுவர்.

பெர்த்தியர், 2021ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் வாட்சண்டை வீரர் ஆவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!