மயாமி பொது விருது டென்னிஸ்: வெற்றியாளர் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி

மயாமி பொது விருது டென்னிஸ்: வெற்றியாளர் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி

1 mins read
35c1db73-97e5-48fb-b0ef-ec317327413c
வெற்றியாளர் பட்டம் வென்ற போபண்ணா, எப்டன் ஜோடி. - படம்: இந்திய ஊடகம்

மையாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் நடப்பு மயாமி பொது விருது டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று விருதை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் குரோவேஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜி செக் ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் 6-7(3), 6-3, 10-6 என்ற ஆட்டக்கணக்கில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது.

நடப்பு ஆண்டில் அவர்கள் இருவரும் இணைந்து வென்றுள்ள இரண்டாவது வெற்றியாளர் பட்டம் இது.

முன்னதாக, அரை இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது ஸ்பெயினின் மார்செல் கிரானோல்லர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை வீழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்