படகு வலித்தல் வீராங்கனை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

சிங்கப்பூரின் படகு வலித்தல் வீராங்கனை ஸ்டெஃபனி சென் இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 500 மீட்டர் படகு வலித்தல் தகுதிச் சுற்றில் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சீனா முதலிடத்தையும் உஸ்பெக்கிஸ்தான் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதை சென் நூலிழையில் தவறவிட்டார்.

அந்த ஏமாற்றத்தைக் கண்டு மனந்தளராமல் தொடர்ந்து போராடிய சென் இம்முறை தமது இலக்கை எட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியின் படகு வலித்தல் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து யாரும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!