நடுவருடன் வாக்குவாதம் செய்ததற்காக விராட் கோஹ்லிக்கு 50 விழுக்காடு அபராதம்

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பந்தடிப்பாளரான விராட் கோஹ்லிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுக்கிழமை கோல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 223 ஓட்டங்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி ஓர் ஓட்ட வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தொடக்க வீரரான விராட் கோஹ்லி, ஹர்ஷித் ராணா இடுப்பு உயரத்துக்கு புல்டாஸாக வீசிய பந்தை அடித்த நிலையில் அது ஹர்ஷித் ராணாவிடமே கேட்ச் ஆனது. இது நோபால் என பெங்களூரு அணி தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால் இதை ஹவாக்-ஐ தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்த 3வது நடுவர், கோஹ்லி அவுட் என அறிவித்தார்.

இதனால் விரக்தியடைந்த கோஹ்லி கள நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது எந்த முறையில் அவுட் கொடுக்கப்பட்டது என களநடுவர்கள் விளக்கம் அளித்தனர். இதன் பின்னரே விராட் கோஹ்லி களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் விராட் கோஹ்லி, நடத்தை விதிமுறைகளை மீறியதாக போட்டியின் ஊதியத்தில் 50 விழுக்காட்டை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!