ஸ்பர்சைத் திக்குமுக்காடவைத்த செல்சி

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது செல்சி.

ட்ரெவர் ‌ஷாலோபா, நிக்கலஸ் ஜேக்சன் ஆகியோர் செல்சியின் கோல்களைப் போட்டனர்.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஸ்பர்ஸ் அடுத்தப் பருவத்தின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்புகள் சரிந்தன. சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதிபெற பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கவேண்டும்.

மேலும், தொடர்ந்து மூன்று லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்துவிட்டது ஸ்பர்ஸ். செல்சிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு ஆர்சனலிடம் 3-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த ஸ்பர்ஸ், அதற்கு முன்பு நியூகாசல் யுனைடெட்டிடம் 4-0 என படுதோல்வி கண்டது.

தனது விளையாட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதை ஸ்பர்ஸ் நிர்வாகி ஆஞ்சி பொஸ்டக்கொக்லு ஒப்புக்கொண்டார்.

“நாம் மனவுறுதியையும் ஓரளவு நம்பிக்கையையும் இழந்துவிட்டது எங்கள் விளையாட்டில் தெரிந்தது. இதை மாற்றுவது எனது பொறுப்பாகும்,” என்றார் பொஸ்டக்கொக்லு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!