தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நார்வே சதுரங்கத் தொடரில் அக்கா, தம்பி முதல் இடம்

1 mins read
89966f4c-6f9e-432d-9c25-2d4ed5390288
முதல் நிலை வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா (வலது) வீழ்த்துவது இது முதல் முறை. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

ஸ்டாவஞ்சர்: நார்வேயில் அனைத்துலக சதுரங்கத் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக வெற்றியாளரான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக வெற்றியாளரான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் பொதுப் பிரிவில் பங்கேற்கின்றனர்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.

மே 30ஆம் தேதி நடந்த 3வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளைக் காய்களைக் கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில், மகளிருக்கான சதுரங்கப் பிரிவின் ‘கிளாசிக்கல்’ ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் இருக்கிறார்.

நார்வே சதுரங்கத் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்