தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

2 mins read
024291d3-30ed-41d4-a12d-0ee8c5231e28
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மாலத்தீவுகள் வீராங்கனை பாத்திமத் அப்துல் ரசாக் நபாஹாவை வெற்றி கண்டார். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

33வது ஒலிம்பிக் விளையாட்டுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, மாலத்தீவுகள் வீராங்கனை பாத்திமத் அப்துல் ரசாக் நபாஹா இருவரும் மோதினர். இந்த ஆட்டத்தில் சிந்து, 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமத் அப்துல் ரசாக்கை வீழ்த்தினார்.

இதையடுத்து வரும் 31ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்டோனியா நாட்டு வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டு விளையாடவுள்ளார். முன்னதாக பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2020 தோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜோடி தோல்வி 

மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி கண்டது. ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடி, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா - அஸ்வினி பொன்னப்பா ஜோடியைத் தோற்கடித்தது.

அடுத்த ஆட்டத்தில் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி ஜோடி, ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா ஜோடியுடன் மோத உள்ளது.

குறிப்புச் சொற்கள்