இந்திய அணியுடன் இணைந்த விராத்

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா, இந்திய கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக சில நாள்களுக்குமுன் லண்டனுக்கு அவசரப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர் விராத் கோஹ்லி மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்று, இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

லண்டன் செல்வதற்குமுன் தென்னாப்பிரிக்காவில் அவர் மூன்று நாள்கள் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

டிசம்பர் 15ஆம் தேதி தென்னாப்பிரிக்கா சென்ற அவர், அங்கிருந்து 19ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 எனச் சமன் செய்த இந்திய அணி, அதன்பின் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது.

இந்திய டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஜஸ்பிரீத் பும்ரா (துணைத் தலைவர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்குர், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, அபிமன்யு ஈஸ்வரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!