‘உலகக் கிண்ணத்தை வெல்ல நாங்கள் அவதியுற வேண்டியிருந்தது’

உலகக் கிண்ணத்தை 36 ஆண்டுகளில் முதன்முறையாக வெல்வதற்கு அர்ஜென்டினா அவதியுறவும் பாடுபடவும் வேண்டியிருந்தது.

பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதியாட்டம் குறித்து கருத்துரைத்த அர்ஜென்டினா கோல்காப்பாளர் எமிலியானோ மார்ட்டினேஸ், “நாங்கள் அவதியுற்ற ஆட்டமாக இது அமைந்தது,” என்றார்.

பரபரப்புக்கு குறைவே இல்லாத இறுதியாட்டத்தில் இரண்டு முறை முன்னிலையை நழுவவிட்டது அர்ஜென்டினா.

ஆட்டம் முடிவடைந்த பிறகு தம்மால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி சொன்னார்.

“இந்த ஆட்டத்தில் நாங்கள் இவ்வளவு அவதியுற்றுள்ளோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால், இந்த அணி அனைத்திற்கும் பதிலடி கொடுத்தது,” என்றார் அவர்.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஆக இளம் பயிற்றுவிப்பாளராக ஸ்கலோனி, 44, உள்ளார்.

அர்ஜென்டினாவுக்கு இது மூன்றாவது உலகக் கிண்ணம் ஆகும். கடைசியாக, 1986ல் டியேகோ மாரடோனா கிட்டத்தட்ட தனியாளாக நின்று அர்ஜென்டினாவுக்கு கிண்ணத்தை வென்று தந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!