இறுதிக்குத் தகுதிபெறுமா இந்தியா?

இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (மார்ச் 9) ஆஸ்திரேலியாவுடன் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

ஆட்டம் அகமதாபாத்தில் நடக்கிறது. 

நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்று கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

இருப்பினும் மூன்றாவது ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற சில சிக்கல்கள் உள்ளன.

நான்காவது ஆட்டத்தை வென்றால் இந்திய அணி எளிதாக இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறும்.

ஆனால் இந்திய அணி ஆட்டத்தை சமன் செய்தாலோ தோற்றாலோ அது இலங்கை-நியூசிலாந்து தொடரை நம்பி இருக்க வேண்டும். 

இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்று தொடரை வென்றால் இந்திய அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறாமல் போகக்கூடும்.  

டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது. 

இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் மாதம் 7ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!