இந்தியாவில் முதல்முறையாக புதுவையில் வசிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விநியோகம்

இந்தியாவில் முதல்முறையாக புதுவையில் வசிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விநியோகம்

2 mins read

புதுச்­சேரி: இந்­தி­யா­வி­லேயே முதல்­மு­றை­யாக புதுச்­சே­ரி­யில் முதல்­கட்­ட­மாக 50,000 ஏழைக் குடும்­பத்­தைச் சேர்ந்த பெண் களுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் உத­வித்­தொகை வழங்­கும் திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால், அங்கு வசிக்­கும் பெண்­கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது.

புதுச்­சே­ரி­யில் கடந்த ஆண்டு வரவு செல­வுத் திட்­டத்­தில், 21 வய­துக்­கு­மேல் 55 வய­திற்­குள் இருக்­கும் அர­சின் மாதாந்­திர உத­வித் தொகை பெறாத வறு மைக் கோட்­டிற்கு கீழ் இருக்­கும் குடும்­பத் தலை­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் தலா ரூ.1,000 வீதம் வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கதிர்­கா­மம் அர­சுப் பெண்­கள் பள்­ளி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் இந்­தத் திட்­டத்தை துணை நிலை ஆளு­நர் தமி­ழிசை சௌந்­தரராஜன், முதல்­வர் ரங்­க­சாமி ஆகியோர் தொடங்கி வைத்­த­னர்.

அதன்­பின்­னர் ஆளு­நர் தமி­ழிசை பேசு­கை­யில், "பெண்­க­ளின் கையில் பணம் இருந்­தால் அது சுய­ந­ல­மாக இருக்­காது. அது குடும்­பத்­துக்­கா­கத்­தான் இருக்­கும் என்­பதை உணர்ந்து இந்த அரசு கொடுத்­துள்­ளது. பொதுவாக பெண்­கள் தங்­க­ளுக்­காக உதவி கேட்­க­மாட்­டார்­கள். குடும்­பத்­துக்­காக, கண­வ­னுக்­காக, குழந்­தைக்­கா­கவே உதவி நாடு­வார்­கள். எனவே, அப்­ப­டிப்­பட்ட பெண்­க­ளுக்கு உதவி செய்­வ­தில் தவறே இல்லை. புதுச்­சேரி அரசு அறி­விக்­காத திட்­டங்­க­ளை­யும் செய்­கிறது. சில அரசு அறி­வித்த திட்­டங்­க­ளை­க்கூட செய்­வ­தில்லை. புதுவை போல் வேறு எந்த மாநி­லத்திலும் குடி­ய­ர­சுத் தினத்­தை­யொட்டி இது­போல் பரிசு கிடைத்­த­தில்லை," என்­றார்.

முதல்­வர் ரங்­க­சாமி பேசு­கை­யில், "உதவி ஏதும் கிடைக்­காத ஏழைப் பெண்­க­ளுக்கு தற்­போது மாதம் ரூ.1,000 வழங்­கும் திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. முதல் கட்­ட­மாக 50,000 குடும்­பத் தலை­வி­க­ளுக்கு மாதம் ரூ.1,000 தரு­கி­றோம். இதற்­கென ரூ.5 கோடி ஒதுக்­கி­யுள்­ளோம். அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு வரும் பிப்­ர­வரி­மாதம் மடிக்­க­ணினி, மிதி­வண்­டி­களை வழங்­க நிதி ஒதுக்­கி உள்ளோம். கடந்த ஆட்­சி­யில் விடு­பட்ட திட்­டங்­களையும் கண்­டிப்­பாகச் செயல்­ப­டுத்­து­வோம்," என்று தெரி­வித்­தார்.