கோவை: கட்டுமானப் பணிக்காக குழி தோண்டியபோது தங்கப்புதையல் கிடைத்ததாகக் கூறி மளிகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டு, தலைமறைவான கர்நாடக கும்பலைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சோ்ந்தவர் சதாசிவம், 48.
மளிகைக் கடை நடத்தி வரும் இவரிடம், கடந்த மே மாதம் ஆடவர் ஒருவர் அறிமுகமானார்.
அதே பகுதியில் கட்டட வேலை செய்வதாகக் கூறி, கடைக்கு அடிக்கடி வந்து மளிகைப்பொருள்களை வாங்கிச்செல்வார்.
இந்நிலையில், கட்டுமானப் பணிக்காக அஸ்திவாரம் போடு வதற்காக குழி தோண்டியபோது, தங்கப் புதையல் கிடைத்ததாகக் கூறிய அந்த ஆடவர், இரு சரங்கள் கொண்ட சங்கிலியைச் சதாசிவத்திடம் காட்டினார்.
அதன்பிறகு, சங்கிலியில் உள்ள அதேபோன்ற இரு முத்துகளை மட்டும் சதாசிவத்திடம் கொடுத்து அவை தங்கமா என சோதித்துப் பார்க்கும்படி கூறினார்.
சதாசிவம் நகைக்கொல்லரிடம் சென்று இரு தங்க முத்துகளையும் சோதித்துப் பார்த்ததில் அவை தங்கம்தான் என உறுதியானது.
இதைத்தொடர்ந்து, புதையலில் கிடைத்த தங்கச் சங்கிலி ஒரு கிலோ எடை கொண்டது எனக் கூறி, ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சங்கிலியை ரூ.10 லட்சத்துக்கு தருவதாக அந்த ஆடவர் சதாசிவத்திடம் ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சதாசிவம், ரூ.10 லட்சம் கொடுத்து தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளார்.
சில நாள்கள் கழித்து தங்கச் சங்கிலியைச் சோதித்துப் பார்த்தபோது அத்தனையும் பித்தளை என்பது தெரியவர, சதாசிவம் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின்னா் அவரால் சங்கிலி யைக் கொடுத்த ஆடவரைத் தொடா்புகொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதாசிவம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.ஆனால், அங்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படாததால், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணனைச் சந்தித்து சதாசிவம் மனு அளித்தாா்.
இதுதொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சதாசிவம் கூறுகையில், "ரூ.40 லட்சம் மதிப்புள்ள சங்கிலியை ரூ.10 லட்சத்துக்கு கொடுத்துள்ளோம். இது யாருக் காவது தெரிந்தால் அரசு அதிகாரிகள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிடுவார்கள். எனவே ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்," என்று கூறிவிட்டுச் சென்றார்.
"மொத்தத்தில் நான் நம்பி ஏமாந்து போய்விட்டேன். என் பணத்தை மீட்டுத் தரும்படி புகார் அளித்துள்ளேன்," என சதாசிவம் வேதனையுடன் கூறினார்.

