பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர்

1 mins read

சமை­யல் எரி­வாயு விலை அதி­க­ரித்­துள்­ள­தால், அதன் விலை­யைக் குறைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று இல்­லத் தர­சி­கள் தமி­ழ­கம் எங்­கும் பர­வ­லாக வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

மத்­திய அர­சின் பெட்­ரோல், டீசல், சமை­யல் எரி­வாயு விலை உயர்­வைக் கண்­டித்து மாநி­லத்­தின் பல மாவட்­டங்­க­ளி­லும் கண்­டன ஆர்ப்­பாட்­டங்கள் நடைபெற்றன.

திரு­மங்­க­லத்­தில் ராஜாஜி சிலை, விரு­து­ந­கர் பழைய பேருந்து நிலை­யம், திண்­டுக்­கல் மணிக்­கூண்டு, தேனி பங்­க­ளா­மேடு, ஆண்­டி­பட்டி­யில் முரு­கன் திரையரங்­கம், ராம­நா­த­பு­ரம் அரண்­மனை, சிவ­கங்கை அரண்­ம­னை­வா­சல் உள்­ளிட்ட இடங்­களில் திமு­க­வி­னர் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

திமு­க­வின் மாவட்­டச் செய லாளர்­கள், தொண்­டர்­கள், ஆத­ர­வா­ளர்­கள், முக்­கிய தலை­வர்­கள் உள்­ளிட்­டோர் மத்­திய அர­சுக்கு எதி­ராக முழக்­க­மிட்­ட­னர். சில பகுதி­களில் சைக்­கி­ளில் திமுக கொடி­யுடன் பெட்­ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்­டித்து தெருக்­களில் வலம் வந்­த­னர்.