சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால், அதன் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல்லத் தரசிகள் தமிழகம் எங்கும் பரவலாக வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருமங்கலத்தில் ராஜாஜி சிலை, விருதுநகர் பழைய பேருந்து நிலையம், திண்டுக்கல் மணிக்கூண்டு, தேனி பங்களாமேடு, ஆண்டிபட்டியில் முருகன் திரையரங்கம், ராமநாதபுரம் அரண்மனை, சிவகங்கை அரண்மனைவாசல் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுகவின் மாவட்டச் செய லாளர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சில பகுதிகளில் சைக்கிளில் திமுக கொடியுடன் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தெருக்களில் வலம் வந்தனர்.

