நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் சிலர் மிதிவண்டி உலகச்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்நாட்டுத் தலை நகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த 61 வயதான கரோலின் வேண் டிஸ் என்பவர் கல்வி அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளார்.
அதில் இணைந்துள்ள பெண்களுடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாடுகளில் அடித்தட்டு மக்களைச் சந்தித்துப் பேசுவதுடன், சிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியைத் தொடர உதவுகிறார்.
தற்போது சென்னை வந்துள்ள இக்குழுவினர் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்ததாகவும் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட்டு மகிழ்ந்ததாகவும் தெரிவித்தனர்.

