கனமழையிலும் பொதுமக்களுக்கு 100% பால் விநியோகம்: ஆவின்

1 mins read
4f35c247-2070-460e-aa1d-43732c64dbfe
சனிக்கிழமை (நவம்பர் 30) சுமார் 15 லட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் யுஎச்டி (UHT) பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கனமழையிலும் பொதுமக்களுக்கு 100% பால் விநியோகம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்குத் தேவையான பால் 100% விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை (நவம்பர் 30) சுமார் 15 லட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் யுஎச்டி (UHT) பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

“கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர், யுஎச்டி பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

“சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருள்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு பால் எளிதில் கிடைக்க எட்டு ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்