திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

1 mins read
4cafbe93-3da3-44da-806b-6bfd67a28bcd
இரண்டு அடி நீளமுள்ள அந்தக் கல்வெட்டில் ஏழு வரிகள் காணப்படுகிறது. - படம்: ஈடிவி பாரத்
multi-img1 of 2

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வண்ணி கண்மாகரையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கல்வெட்டை தொல்லியல் குழு ஆய்வு செய்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, இரண்டு அடி நீளமுள்ள அந்தக் கல்வெட்டில் ஏழு வரிகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அந்த வரிகள் நிறைவடையும் இடத்தில் ஒரு பூரணகும்பமும் அதன் இரு பகுதிகளில் குத்து விளக்குகளும் காணப்படுவதாக அவர் கூறினார்.

இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்ட அவர், கல்வெட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள வண்ணக்க நல்லூர் குளக்கரையில் வாழ்ந்த சீயர் என்பவர் மக்களுக்கு நல்வாழ்வுக்கான வேதநெறியைக் கற்பித்துப் பாதுகாத்து வந்துள்ளார் என்பதையும் அறிய முடிவதாகத் தெரிவித்தார்.

அப்பகுதியிலிருந்து மேலும் இரண்டு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அப்பகுதி வண்ணக்க நல்லூர் என்று அழைக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகம் முழு​வதும் கிராமங்​களில் காவல் தெய்​வ​மாக உள்ள அய்​ய​னார், பூரணா, புஷ்பகலா ஆகிய தேவியருட​னும் காட்​சி​யளிப்​பது வழக்​கம். ஆனால், இங்​குள்ள அய்​ய​னார், தேவியர் இன்றி தனித்து உத்​குடி ஆசனத்​தில் (அமர்ந்த நிலை) கம்​பீர​மாக வீற்​றிருக்​கிறார்.

அய்​ய​னார் சிற்​பம் 12 அல்​லது 13ஆம் நூற்​றாண்​டைச் சேர்ந்​ததாக இருக்​கலாம் என்றார் புலவர் காளிராசா.

குறிப்புச் சொற்கள்