பிரியாணி சமையலால் பிரபலமான குற்றவாளி மீது 20 வழக்குகள் நிலுவை; கைப்பேசியில் ஆபாசக் காணொளிகள்

2 mins read
6d3cc586-bb84-43e7-b9b6-7c4b28135414
சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சென்னை கோட்​டூர் பகுதியில் பிரி​யாணிக் கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) கைதுசெய்யப்பட்டு, காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தகராறு, திருட்டு என ஞானசேகரன் மீது கோட்​டூர்​புரம் காவல் நிலை​யத்​தில் 20 வழக்​குகள் நிலுவை​யில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிணையில் வெளியே வர முடி​யாதபடி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது எட்டு பிரிவு​களின் கீழ் காவலர்கள் வழக்​குப் பதிந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.

“அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அதில், 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. 140 பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். இந்த மாணவி தைரியமாகப் புகாரளித்தது போல மற்றவர்களும் தைரியமாகப் புகாரளிக்க வேண்டும்.

“குற்றவாளி எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், “சிறு​வய​திலேயே போதைப் பழக்​கத்​துக்கு அடிமையான ஞானசேகரன், பொறியியல் துறையில் டிப்ளமோ பெற்றுள்ளார். நண்பர்​களுடன் சேர்ந்து வீட்​டிலேயே பிரி​யாணி சமைத்து சாலை​யோரம் விற்பனை செய்​துள்ளார்.

“வியாபாரம் நல்லபடியாக கைகொடுக்க, படிப்​படியாக பிரி​யாணி தொழிலை விரிவுபடுத்தி உள்ளார்.

“சென்னை​யில் அடையாறு, காந்தி நகர், கோட்​டூர் உட்பட மூன்று இடங்​களில் நடைபாதைகளில் நடமாடும் வாகனத்​தில் பிரி​யாணி விற்பனை செய்​துள்ளார்.

“வருமானம் அதிகமானதும் ஞானசேகர​னுக்கு பல பெண்​களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடுத்​தடுத்து மூன்று திரு​மணங்களைச் (சட்​ட​பூர்​வமாக அல்ல) செய்​துள்ளார். இதில், முதல் மனைவி பிரிந்து சென்ற நிலை​யில், மற்ற இரு மனைவி​களுடன் குடும்பம் நடத்​தி​ உள்​ளார்.

“இவர்களில் ஒரு மனைவி, சென்னை அண்ணா பல்கலைக்கழக உணவு விடு​தி​யில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

“பணமும் பிரியாணி சமையலும் ஞானசேக​ரனுக்கு அரசியல் வட்டாரத் தொடர்​பு​களை​யும் ஏற்படுத்தித் தந்துள்​ளது.

“இதன் மூலம், கட்சிப் போராட்​டங்​கள், கட்சி நிகழ்ச்​சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்​சிகளுக்​கும் ஞானசேகரனே பிரி​யாணி தயாரித்து தந்துள்ளார்.

“இவரது கைப்பேசியை இணையக் குற்றக் காவலர்களின் உதவி​யுடன் ஆய்வு செய்​த​போது, ஏறக்குறைய 50 ஆபாசக் காணொளிகள் இருந்​தது தெரியவந்தது.

“இந்நிலை​யில், ஞானசேகரனின் பின்னணி, இவருக்கு உதவி​யாக, உடந்​தையாக இருந்​தவர்கள் யார் ​யார் என்ற பட்​டியலை ​காவலர்கள் சேகரித்து வரு​கின்​றனர். இதற்காக அவரை ​காவலில் எடுத்து ​விசா​ரிக்​க​வும் ​திட்​ட​மிட்​டுள்​ளனர்​.

“அதற்​கான ​முதற்​கட்​ட பணி தொடங்​கி உள்​ளது,” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஞான​சேகரனால் மேலும் மூன்று பெண்கள் பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், அவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவ​தாக​வும் கூறப்​படு​கிறது.

சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ள உயர்நீதிமன்றம், மூன்று பெண் அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்