மாரத்தான் போட்டியில் 25,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

1 mins read
41302459-61cc-48c7-a4e1-569d18e9cb90
சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 25,000க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தலைநகர் சென்னையில் நான்கு பிரிவுகளின்கீழ் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜனவரி 5) நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 25,000க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்தின.

முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது.

நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், எலியட்ஸ் கடற்கரையில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை பங்குபெற்ற போட்டியாளர்கள் ஓடிக் கடந்தனர்.

அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடைந்தன.

தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்