தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
270 நாள்களில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது

திருச்சியில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம்

1 mins read
5a0bd281-2a1b-4d2d-b891-b533829cf4b7
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி சூரியூரில் ரூ.3 கோடிக்கு ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டுடன் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அமைய உள்ள அந்த அரங்கிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.

அதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் கிராமத்தில் முதலமைச்சர் சிறிய விளையாட்டு அரங்கம் – ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கு விருப்பம் உள்ள நிறுவனங்கள் பிப்ரவரி 4 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வழங்கி தளத்தை ஒப்படைத்த நாளிலிருந்து 270 நாட்களில் பணியை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சூரியூரில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். தஞ்சாவூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும்.

இந்த ஆண்டு சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஷ் விழா குழுவினரிடம் வழங்கினார். அப்போது, ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்