சென்னை: மகா கும்பமேளாவை முன்னிட்டு, சென்னை - லக்னோ ஆகியவற்றுக்கு செல்ல மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கையில், “கன்னியாகுமரியில் இருந்து, வரும் ஜனவரி 6, 20ஆம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4வது நாள் அதிகாலை 1:30 மணிக்கு, பீஹார் மாநிலம், கயா செல்லும்.
மறுமார்க்கமாக, கயாவில் இருந்து, ஜனவரி 9, 23ஆம் தேதிகளில் இரவு 11:55க்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:50 மணிக்கு கன்னியாகுமரி திரும்பும்.
கன்னியாகுமரியில் இருந்து, பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 9:50 மணிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் செல்லும்.
மறுமார்க்கமாக பனாரஸில் இருந்து, பிப்ரவரி 20ஆம் தேதி மாலை 6:05க்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் இரவு 9:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்.
இது, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜனவரி 8, 15, 22, பிப்ரவரி 5, 19, 26ஆம் தேதிகளில் மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள மோமதி நகருக்கு, அடுத்த மூன்றாவது நாள் மதியம் 2:15க்கு செல்லும்.
மறுமார்க்கமாக, மோமதி நகரில் இருந்து, ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 8, 22, மார்ச் 1ஆம் தேதிகளில் அதிகாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:55க்கு சென்னை சென்ட்ரல் திரும்பும்.
தொடர்புடைய செய்திகள்
நேற்று காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.