70,000 பேர் எஸ்ஐஆர் பணியைப் புறக்கணித்துப் போராட்டம்

2 mins read
ae8cec6f-1b99-4ab1-8258-9dc33825f4c8
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தமிழகத்தில் முழுவீச்சாக நடந்து வரும் நிலையில், அரசுப் பணியாளர்கள் 70,000 பேர் அப்பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் ஏறத்​தாழ 71,000 பேர் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களாக (பிஎல்ஓ) நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதிக பணி நெருக்​கடி காரண​மாக திங்கட்கிழமை (நவம்பர் 18) முதல் எஸ்​ஐஆர் பணி​களைப் புறக்கணிக்​கப் போவ​தாக வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்டமைப்பு முன்னதாக அறி​வித்​திருந்​தது.

அதன்படி, அரசு ஊழியர்கள் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பணிக்காக எவ்விதப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அத்துடன் ஒழுங்கான திட்டமிடலும் இல்லை. அவசர அவசரமாகப் பணியை முடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் பணியாளர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்​நிலை​யில், வரு​வாய்த் துறை ஊழியர்​கள் செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்​த​போதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி​களை அவர்கள் முற்​றி​லு​மாகப் புறக்​கணித்​தனர். இதனால், தமிழகம் முழு​வதும் எஸ்​ஐஆர் பணி​கள் பாதிக்​கப்​பட்​டன.

இதுகுறித்து வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்​டமைப்பு மாநில ஒருங்​கிணைப்​பாள​ரும், தமிழ்​நாடு வரு​வாய்த் துறை அலு​வலர் சங்க மாநிலத் தலை​வரு​மான எம்​.பி.​முரு​கையன் கூறும்​போது, “கி​ராம உதவி​யாளர்​கள், ‘விஏஓ’க்கள், வரு​வாய் ஆய்​வாளர்​கள், துணை வட்​டாட்​சி​யர்​கள், வட்​டாட்​சி​யர்​கள், சர்​வேயர்​கள், கள உதவி​யாளர்​கள் என வரு​வாய்த் துறை​யில் மட்​டும் 42 ஆயிரம் பேர் எஸ்​ஐஆர் பணி புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்,” என்றார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, வீடு வீடாகக் கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலு[Ϟ]வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களுக்குப் படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்