ஆந்திராவில் தலைமறைவு; மீண்டும் கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கர்

ஆந்திராவில் தலைமறைவு; மீண்டும் கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கர்

1 mins read
6efaaf90-6f3b-45ad-b007-39682f8a9a51
சவுக்கு சங்கர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட சவுக்கு சங்கர், நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்து வந்தார்.

அவரைத் தமிழகக் காவல்துறை ஏப்ரல் 8ஆம் தேதி கைதுசெய்தது.

‘சவுக்கு மீடியா’ எனும் ஒளிவழி அலைவரிசையின் தலைமைச் செயல் அதி​காரி​ சவுக்கு சங்​கர்மீது இரு மோசடி வழக்​கு​கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

அதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்​நலப் பிரச்​சினை​கள் இருப்​ப​தால் பிணையில் விடுவிக்​கக்​கோரி அவரது தாயார் கமலா மனுத்தாக்​கல் செய்​தார்.

மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25ஆம் தேதி வரை அவருக்கு நிபந்தனையுடன்கூடிய இடைக்​காலப் பிணை வழங்கியிருந்தது.

மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்டிய அவர் தலைமறைவானார்.

ஆந்திராவில் தலைமறை​வான சவுக்கு சங்​கரைத் தனிப்​படை அமைத்துச் சென்னை காவல்துறை​ அதிகாரிகள் தேடிவந்​தனர்.

இந்​நிலை​யில், அவர் ஆந்​திர மாநிலத்​தில் உள்ள தங்கு விடுதி ஒன்​றில் இருப்​ப​தாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, ஏப்ரல் 8ஆம் தேதி அங்கு விரைந்த அதிகாரிகள் சவுக்கு சங்​கரைக் கைது செய்​தனர்.

குறிப்புச் சொற்கள்