தமிழ்நாட்டில் 35 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

2 mins read
26c31cd6-27e5-411e-8e0b-6f6bb392a187
புதிய நடவடிக்கையால் சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் ஆகிய ரயில் நிலையங்​களில் ஏற்​படும் நெரிசல் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழ்நாடு முழு​வதும் 35 ரயில்​களுக்​குக் கூடு​தல் நிறுத்​தங்​கள் அளிக்க இந்​திய ரயில்வே உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பான அதிகாரபூர்வ அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும் என்று ‘இந்து தமிழ் திசை’ செய்தி தெரிவிக்கிறது.

பயணி​களின் தேவை அடிப்​படை​யில் தெற்கு ரயில்​வே​யின் முக்​கிய வழித்​தடங்​களில் விரைவு ரயில்​கள், பயணிகள் ரயில்​களுக்கான நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும்.

கூடு​தல் ரயில் நிறுத்​தங்​கள் வழங்க பயணி​கள், சமூக ஆர்​வலர்​கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

35 ரயில்களில் 29 விரைவு ரயில்​கள் ஆகும். மற்ற ஆறும் பயணிகள் ரயில்​கள் ஆகும். கூடு​தல் நிறுத்​தங்​களை வழங்க ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

சென்னை - கோயம்​புத்​தூர் கோவை விரைவு ரயில், சென்னை-பெங்​களூரு இரு அடுக்கு ரயில் ஆகிய ரயில்​களுக்கு திரு​வள்​ளூர் நிலை​யத்​தில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளது.

அதேபோல், சென்னை - ஜோலார்​பேட்டை விரைவு ரயில் இனி அம்​பத்​தூரில் நின்று செல்​லும். அதே​நேரம் சென்னை எழும்​பூர் - சத்​ரபதி சிவாஜி மகா​ராஜ் டெர்​மினஸ் விரைவு ரயிலுக்கு அரக்​கோணத்​தில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளது.

மங்​களூர்- சென்னை சென்ட்​ரல் விரைவு ரயில், திரு​வனந்​த​புரம் - சென்னை சென்ட்​ரல், அகம​தா​பாத் - சென்னை சென்ட்​ரல், புதுச்சேரி - காச்​சிகு​டா, செங்​கல்​பட்டு - காச்​சிகுடா உள்​ளிட்ட ரயில்​களுக்கு பெரம்​பூரில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளன.

நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்ள 29 விரைவு ரயில்​ சேவைகளில் மெயில், அதி​விரைவு, அந்த்​யோதயா ஆகியவை அடங்​கும்.

இதுத​விர, சென்னை-மும்​பை, சென்னை-விஜய​வா​டா, பெங்​களூரு - கன்​னி​யாகுமரி போன்ற நீண்ட தூர மாநிலங்​களுக்கு இடையே​யான ரயில் சேவை​களும் அடங்​கும்.

மேலும், மெட்ரோ ரயில் இணைப்பு உள்ள விம்கோ நகரில் சென்னை-விஜய​வாடா பினாகினி விரைவு ரயில், விஜய​வாடா ஜன சதாப்தி விரைவு ரயில், பித்​ரகுண்டா-சென்னை சென்ட்​ரல் பயணி​கள் ரயில் ஆகிய​வற்​றுக்கு நிறுத்​தம் வழங்​கு​வதும் அடங்​கும். சென்னை எழும்​பூர்-கன்​னி​யாகுமரி விரைவு ரயிலுக்கு கோவில்​பட்​டி​யில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளது.

இந்த நடவடிக்கை மூல​மாக, சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் ஆகிய ரயில் நிலையங்​களில் ஏற்​படும் நெரிசல் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

புதிய நிறுத்தங்கள் அமைக்கப்படுவது பயணி​கள் முக்​கிய ரயில் முனை​யங்​களுக்​குப் பயணிக்​காமலேயே நீண்ட தூர ரயில்​களில் எளிதாக பயணம் செய்ய உதவும்.

புதிய நிறுத்​தங்​கள் அமல்​படுத்​தப்​படும் தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்