வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை ரூ.4,000ஆக உயர வாய்ப்பு

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை ரூ.4,000ஆக உயர வாய்ப்பு

1 mins read
7ccb8e56-df88-4dee-8c9e-74e640bd195c
வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித் தொகை உயர வாய்ப்பு உள்ளதாக தமிழக தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வேலை​யில்லாப் பட்​ட​தா​ரி​களுக்கு வழங்​கப்​படும் உதவித் தொகை ரூ.4,000ஆக உயர வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பான விவரங்கள் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் அறி​விக்கப்படும் என்று தொழிலா​ளர் நலத்துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்வேஸ் நம்பிக்கை தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் அரசுத் துறை​கள் சார்​பில் 721 பேருக்கு நலத்திட்ட உதவி​கள் வழங்​கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 18) நடை​பெற்​றது. இந்நிகழ்ச்சி ஆட்​சி​யர் எம்​.அருணா தலைமையில் நடைபெற்றது.

அப்போது பயனாளி​களுக்கு நலத்திட்ட உதவி​கள் வழங்கப்பட்டன.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ், “சிவ​காசி பட்​டாசு ஆலைத் தொழிலா​ளர்​களுக்​குப் பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கு​வது உள்​ளிட்ட தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் குறித்து அரசு பரிசீலித்து வரு​கிறது. தேர்​தல் வாக்குறுதிகள் அனைத்​தை​யும் உரிய காலத்​துக்​குள் நிறைவேற்ற வேண்​டும் என முதல்​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

“இதன் அடிப்​படை​யில், வேலை​யில்லாப் பட்​ட​தா​ரி​களுக்கு வழங்​கப்​படும் உதவித் தொகை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இதற்​கான அறி​விப்பு வரும் பட்ஜெட்​டில் வெளி​யாக வாய்ப்பு உள்​ளது,” என்றார்.

தேயிலைத் தோட்ட நல வாரியத் தொழிலா​ளர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட உதவிகள் வழங்​கு​வது குறித்து அதி​காரி​கள் ஆய்வுசெய்து வருவதாகவும் அவர் சொன்னார்.

அது மட்டுமல்லாமல், தமிழகத்​தில் வேலை செய்யும் பிற மாநிலத் தொழிலா​ளர்களின் விவரங்கள் அரசிடம் உள்​ளதாகவும் மாவட்​டம்​தோறும் அதி​காரி​கள் அதன் தொடர்பில் கணக்​கெடுப்பு நடத்தி வரு​வதாகவும் அமைச்சர் ஜெ.​முகமது பர்​வேஸ் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
வேலைவாய்ப்புஉதவித்தொகைபட்டதாரி