உளவுத்துறையைப் பயன்படுத்தி கூட்டணி அமைத்துள்ளார் அமித்ஷா: காங்கிரஸ்

உளவுத்துறையைப் பயன்படுத்தி கூட்டணி அமைத்துள்ளார் அமித்ஷா: காங்கிரஸ்

1 mins read
8a26803b-1f07-4df5-abeb-326e15eff3ac
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகக் கட்சிகளை இணைக்க அமித்ஷா சிபிஐ, ஈடி உள்ளிட்ட மத்திய முகமைகளைப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க சிபிஐ, ஈடி உள்ளிட்ட மத்திய முகமைகளை அமைச்சர் அமித்ஷா பயன்படுத்தியுள்ளார் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் வியாழக்கிழமை தமிழ் நாடு மாணவர் காங்கிரஸ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அகில இந்​திய மாண​வர் காங்​கிரஸ் தலை​வர் வருண் சவுத்​ரி, சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் செ.​ராஜேஷ் கு​மார் ஆகி​யோர் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக பல்​வேறு தீர்​மானங்​கள் நிறை​வேற்​றப்​பட்டன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வருண் சவுத்ரி, “தமி​ழ​கத்​தில் பிறந்த இளைஞர்​களை ஒருங்​கிணைத்து ஒரு மாநில அளவி​லான மாநாட்டை நடத்த வேண்​டும். அதில் பங்​கேற்க காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தியை நான் அழைத்து வரு​கிறேன்,” என்​றார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் குமார், “திமுக - காங்​கிரஸ் கூட்​டணி கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சுமுகமாக இருந்து வரு​கிறது. தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை மத்​திய அமைச்​சர் அமித்ஷா ரிமோட் கன்ட்​ரோல் மூலம் இயக்கி வரு​கி​றார்.

“மத்​திய முகமை​களான ஈடி, சிபிஐ, ஐடி போன்ற துறை​களை வைத்து இக்​கூட்​ட​ணியை உரு​வாக்​கி​யுள்​ளார். அதற்கு உரிய பதிலை மக்கள் வரும் தேர்​தலில் கொடுப்​பார்​கள்.

“திமுகவுடனான கூட்​டணிப் பேச்சு நல்​லபடி​யாக முடி​யும்​. ஆட்​சி, அதி​காரத்​தில் பங்கு என்​ப​தில் காங்கிரஸ் உறு​தி​யாக உள்ளது. அது குறித்து எங்​கள் தலைமை பேசி உரிய முடிவை எடுக்​கும்,”​ என்றார்.

குறிப்புச் சொற்கள்