அசாம்: தேயிலைத் தோட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடியை 9,000 பெண்கள் நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.
அசாமில் தேயிலை தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு கவுகாத்தியில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி விழா மேடை நோக்கி வந்தபோது 9 ஆயிரம் பெண்கள் நடன அசைவுகளுடன் வரவேற்றனர்.

