ரூ.150 கோடியில் தானியக்கமுறையில் ரயில் பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாடு

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமாக 118 கி.மீ. நீளத்திற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணி நடைபெற்று வருகிறது.

இதன்கீழ் கட்டப்படும் புதிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தானியக்கமுறையில் பயணச்சீட்டு வழங்கும் வாசல்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கு ரூ.150 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையைக் கடனாகப் பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.61,843 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதில், மாநில அரசு நிதி தவிர, ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.20,196 கோடியை வழங்குகிறது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி போன்ற வங்கிகளும் நிதி உதவி செய்யவிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!