மணக்கோலத்தில் வாக்களித்தவர்கள்

மணக்கோலத்தில் வாக்களித்தவர்கள்

1 mins read
4c41e186-e088-4b81-a610-85f5c7a2c04f
நாமக்கல்லில் திருமணக் கோலத்தில் வாக்களித்த தீபிகா. - படம்: தினமணி

நாமக்கல்: திருமண நாளன்று, மணக்கோலத்துடன் பல மணமக்கள் வாக்களித்துள்ளனர்.

நாமக்கல் வ.உ.சி நகரைச் சேர்ந்த தீபிகாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை நாமக்கல்லில் திருமணம் நடைபெற்றது.

தாலி கட்டும் நிகழ்வு முடிவடைந்ததும், திருமணக் கோலத்தில் சென்று வாக்களித்த தீபிகா, “மாலை கணவர் வீட்டிற்கு (திருப்பூர்) செல்ல வேண்டும். அதனால், கிளம்புவதற்கு முன்பே வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்று தெரிவித்தார்.

அண்ணன், தங்கைகளான சித்தநாதன் - சிவசங்கரி, ஜெயவீரகார்த்தி- விஷாலி  நால்வரும் மணக்கோலத்தில் வாக்களித்தனர்.
அண்ணன், தங்கைகளான சித்தநாதன் - சிவசங்கரி, ஜெயவீரகார்த்தி- விஷாலி நால்வரும் மணக்கோலத்தில் வாக்களித்தனர். - படம்: பிபிசி

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்தநாதன் - விஷாலி, ஜெயவீரகார்த்தி - சிவசங்கரி தம்பதிகள் திருமணம் முடிந்தபின் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்தனர். சித்தநாதன் - சிவசங்கரி இருவரும் அண்ணன் - தங்கை, அதேபோன்று, ஜெயவீரகார்த்தி- விஷாலி இருவரும் அண்ணன் - தங்கை. 

காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த மணமக்கள் ரவிராகுல்-சிவரஞ்சனி.
காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த மணமக்கள் ரவிராகுல்-சிவரஞ்சனி. - படம்: பிபிசி
தூத்துக்குடி மாவட்டம் தேரிகுடியிருப்பில் ஜெகன்-பிரியா இருவருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. பின்னர் ஜெகன் தேரிகுடியிருப்பிலும் பிரியா மெஞ்ஞானபுரத்திலும் வாக்களித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தேரிகுடியிருப்பில் ஜெகன்-பிரியா இருவருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. பின்னர் ஜெகன் தேரிகுடியிருப்பிலும் பிரியா மெஞ்ஞானபுரத்திலும் வாக்களித்தனர். - படம்: பிபிசி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சுபாஷ் - கனிமொழி இருவரும் மணமுடித்த கையோடு தத்தம் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சுபாஷ் - கனிமொழி இருவரும் மணமுடித்த கையோடு தத்தம் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். - படம்: பிபிசி
கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதி தொட்டியம் கிராமத்தில் திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதி தொட்டியம் கிராமத்தில் திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினர். - படம்: பிபிசி
குறிப்புச் சொற்கள்