பூமிக்கு அடி​யில் தங்​கம்; கடலோர நில அதிர்வுகளுக்கு வாய்ப்பு: புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல்

2 mins read
ed47a60b-8f9d-40e1-81a0-77e014327028
கடலோரப் பகு​தி​களில் கூடு​தல் கவனத்​துடன் இருக்க வேண்டும். அங்கு உயர்ந்த கட்​டடங்​களைக் கட்​டா​மல் இருப்​பது நல்​லது என்றார் திரு விஜயகுமார் - கோப்புப்படம்: கடலோரப் பகுதி

சென்னை: தமிழகத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்​திய புவி​யியல் ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார் தெரி​வித்​துள்ளார்.

நில அதிர்வுகள் தொடர்​பாக பொதுமக்கள் பயப்பட வேண்​டிய சூழல் சென்​னை​யில் இல்​லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்​திய புவி​யியல் ஆய்வு மையத்​தின் 175வது நிறுவன தின​ விழா சென்னையில் நடை​பெற்​றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார், தமிழகக் கடலோரப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் ஏற்படு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ள​தாகத் தெரிவித்தார்.

“மழை பெய்​வது போன்று இப்போதெல்லாம் நில அதிர்​வு​களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அண்மைக்காலமாக நில அதிர்வு தொடர்பான பதிவு​களும் அதி​க​மாக உள்​ளன. சென்னை கருங்கல் மீது உள்ள ஒரு பகு​தி​யாகும். அதனால் சென்னையில் நில அதிர்வுகள் குறித்த அச்சம் தேவையில்லை.

“ஆனால், கடலோரப் பகு​தி​களில் கூடு​தல் கவனத்​துடன் இருக்க வேண்டும். அங்கு உயர்ந்த கட்​டடங்​களைக் கட்​டா​மல் இருப்​பது நல்​லது,” என்றார் திரு விஜயகுமார்.

தமிழகத்​தில் எந்​தெந்​தப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​படக்​கூடிய அபா​யம் உள்​ளது என்ற விவரங்​களை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழு​வதும் உள்ள கனிம வளங்​கள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தி மத்​திய அரசுக்கு அறிக்கை அனுப்​பப்​பட்டு வரு​கிறது என்றார்.

“தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யம் உட்பட சில பகு​தி​களில் பூமிக்கு அடி​யில் தங்​கம் இருப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன.

இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அந்த ஆய்வுகள் முடிவடைந்த பிறகு அதன் விரிவான ஆய்வறிக்கை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

“மேலும், தமிழகத்​தில் உள்ள கனிம வளங்​கள் குறித்து ஆய்வு செய்​த​போது கைப்பேசி பேட்​டரிக்குப் பயன்​படும் ‘லித்தியம்’ இருப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் அறியப்​பட்​டுள்​ளன.

“இது தொடர்பாகவும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கும்,” என்று விஜயகுமார் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்