சென்னை ரயில்வே 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு

சென்னை ரயில்வே 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு

2 mins read
1d6cf4d0-625d-4ad8-83bf-41b04d129653
இதனால் ஆண்டுதோறும் மின் உற்பத்தி செலவு ரூ.19.21 லட்சம் வரை குறையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர். - கோப்புப் படம்: சமயம் தமிழ்

சென்னை: நடப்பு நிதி​யாண்​டில் சென்னை ரயில்வே 2,600 கிலோ​வாட் சூரிய மின்​சக்​தியை உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே கோட்டங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ரயில்வே பிரிவில் ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நிதி​யாண்​டில் சென்னையில் உள்ள பரங்​கிமலை ரயில் நிலை​யம், ஆவடி​யில் உள்ள மண்டல மின்​சார இழுவைப் பயிற்சி மையம், ஆண்​கள் விடுதி, கிண்டி ரயில் நிலை​யம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 140 கிலோ​வாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறு​வப்​பட்​டன.

இதன் மூலம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 2.4 லட்சம் யூனிட் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதனால் ஆண்டுதோறும் மின் உற்பத்திச் செலவு ரூ.19.21 லட்சம் வரை குறையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், நடப்பு நிதி​யாண்​டில் (2026-27) 2,600 கிலோ​வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே துறை இலக்கு நிர்​ண​யித்​துள்​ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்னுற்பத்தி மட்டுமல்லாமல், கரிம வெளியேற்றத்தைக் குறைத்​தல், எரிசக்திப் பாதுகாப்பு, பாரம்​பரிய மின் ஆதா​ரங்​களைச் சார்ந்​திருப்​ப​தைக் குறைத்​தல் ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை கோட்​டத்​தின் மொத்த சூரியசக்தி திறன் 2,494.5 கிலோ​வாட்டை எட்​டி​ உள்​ள நிலையில், கடந்த நிதி​யாண்​டில், 23.15 யூனிட்​ சூரிய சக்​தியை உற்​பத்தி செய்​துள்ளது. இதன் மூலம் ரூ.1.43 கோடி சேமிப்பை ஈட்​டி​யுள்​ளது என்றும் அறிக்கை ஒன்றில் சென்னை ரயில்வே தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்