சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கி விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடங்கியுள்ளது.
இதன்படி ரூ.199க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது.
ரூ.499க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பாக மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய்த் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் உள்ளிட்ட 19 பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ரூ.999 பெரும் பொங்கல் தொகுப்பாக மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

