தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.105 கோடி காப்பீட்டு மோசடி குறித்து விரைந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

2 mins read
ffb7d8cd-662b-4e6f-95f8-b1c9bef8a5cc
தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த காப்பீட்டு மோசடிகள் தொடர்பாக 467 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த காப்பீட்டு மோசடிகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஒரே விபத்துக்கு இழப்பீடு கோரி வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து மோசடிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன.

அவற்றை காப்பீட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்து அதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தன. அவ்வாறு 467 புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

ஆனால், அந்தப் புகார்கள்மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யவில்லை என காப்பீட்டு நிறுவனம் ஒன்று வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இதுவரை காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி 105 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.

காப்பீட்டு நிறுவனங்கள் அளித்துள்ள புகார்​கள் மீது எஃப்​ஐஆர் பதிவு செய்து அந்த வழக்​கு​களை சிறப்புப் புல​னாய்வுக் குழு​வின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்​டும் என வாதிடப்​பட்​டது.

அப்​போது காவல்​துறை தரப்​பில் முன்னிலையான வழக்கறிஞர், காப்புறுதி மோசடி தொடர்​பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசா​ரணை நடத்தக் காவல்துறை தயா​ராக உள்​ள​தாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிப​தி, “ரூ.105 கோடி காப்பீட்டு மோசடி தொடர்​பாக அளிக்​கப்​பட்​டுள்ள 467 புகார்​கள் மீது இது​வரை வழக்​குப்​பதிவு செய்​ய​வில்லை என குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

“எனவே இந்தப் புகார்​கள் மீது உடனடி​யாக எஃப்​ஐஆர் பதிவு செய்து சிறப்புப் புலனாய்வுக் குழு​வின் விசா​ரணைக்கு அனுப்ப வேண்​டும். அந்த விசாரணையை விரைந்து நடத்த வேண்​டும்.

“அதே​போல ஓசூர் மோட்​டார் வாகன விபத்து தீர்ப்​பா​யத்​தில் 82 போலி காப்பீட்டு மோசடி வழக்​கு​களில் சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞர்​கள் குறித்​தும் மாய​மான வழக்குக் கட்​டு​கள் குறித்​தும் மாவட்ட நீதிபதிகள் உரிய விசா​ரணை நடத்தி அதுகுறித்த அறிக்​கையை வரும் அக்​டோபர் 17ஆம் தேதி தாக்​கல் செய்ய வேண்​டும்,” என உத்​தர​விட்டார்.

வழக்கு விசாரணை வேறொரு தேதியில் தொடரும் என்று வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்