சென்னை: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் படிவங்களில் குறிப்பிடப்படும் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரிகள் வரும்போது இல்லாமல் போவோர் தங்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் அவர் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பேசும்போது குறிப்பிட்டார்.
தீவிர திருத்த நடவடிக்கையால் ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.
“இன்று யார் யாரோ திமுகவை அழித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது,” என்றார் திரு ஸ்டாலின்.
நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்ததாகவும் திமுகவினர் எத்தகைய தியாகத்துக்கும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
“வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடுத்திருக்கிறோம். ஒருபக்கம் சட்டப் போராட்டம் நடந்து வந்தாலும், மற்றொரு பக்கம் வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
“எனவேதான் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளோம்,” என்றார் ஸ்டாலின்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அதனால்தான் திமுகவினர் இன்றளவும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றனர் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக வரும் 11ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

