வேலை வாங்கித் தருவதாகச் சொன்னால் ஏமாற வேண்டாம்: மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

1 mins read
22a1064b-3d84-4291-a101-4f5d574678b5
அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கித் தருவதாகச் சொல்வதைக் கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் எச்சரித்துள்​ளார்.

சென்னை - சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்ட நிகழ்வு நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்​சிலர்கள் த.மோகன்​கு​மார், சுப்​பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்​தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்​பிரமணியன் செய்தி​யாளர்​களிடம், “ஊட்டச்​சத்தை உறுதி செய் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டும் அரியலூர் மாவட்​டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த 15ஆம் தேதி அன்றும் முதல்வர் தொடங்கினார்.

“இத்திட்​டத்​தின்​படி, தமிழகம் முழு​வதும் உள்ள ஊட்டச்​சத்து குறைபாடுள்ள குழந்தை​களின் தாய்மார்கள் 76,705 பேர் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அவர்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்கள் வழங்​கப்​படு​கின்றன. மக்களைத் தேடி மருத்​துவம் திட்டத்தை ஐ.நா. மன்றம் பாராட்டி விருது அறிவித்​தது.

“மேலும் விழுப்புரம் மாவட்​டத்துக்குச்​ செல்லும் முதல்வர் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மக்களைத் தேடி மருத்​துவம் திட்​டத்​தின்கீழ் மருந்து பெட்​டகம் வழங்குகிறார்.

“பொது​மக்கள் யாரும் தங்களிடம் மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கித் தருகிறேன், மருத்துவச் சிகிச்​சைகளுக்கு உதவி செய்​கிறோம் என்று கூறு​பவர்​களிடம் ஏமாற வேண்​டாம். இந்த அரசு ​முழு​மையாக வெளிப்​படைத் தன்​மை​யுடன் செயல்​படு​கிறது. இடைத்​தரகர்களை நம்பி ஏமாற வேண்​டாம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்