தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

2 mins read
34040859-4823-429a-9938-6bb341b1fdfb
குடும்​பத்​துடன் சென்னை நீலாங்​கரை கபாலீஸ்​வரர் நகரில் வசித்து வரு​கிறார் அருணா. - படம்: ஊடகம்

சென்னை: முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

அவரது கணவர் மோகன் குப்தா நடத்தி வரும் நிறு​வனத்​தில் சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்​றம் நடை​பெற்​ற​தாக கிடைத்த புகாரின் அடிப்​படை​யில் இந்த சோதனை​ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அருணா. கடந்த 1980களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அருணா, இயக்​குநர் பார​தி​ராஜாவின் ‘கள்​ளுக்​குள் ஈரம்’ படத்​தின் மூலம் நாயகியாக திரையுலகில் அறி​முக​மா​னார்.

அதன் பின்னர், ‘சிவப்பு மல்​லி’, ‘நாடோடி ராஜா’, ‘டார்​லிங் டார்​லிங் டார்​லிங்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த அவருக்கு, தெலுங்கு உள்​ளிட்ட பிற மொழிகளிலும் பல வாய்ப்புகள் கிடைத்தன.

தொழில​திப​ரான மோகன் குப்தா என்​பவரைத் திரு​மணம் செய்துகொண்​டு திரையுலகைவிட்டு விலகிய அருணா, குடும்​பத்​துடன் சென்னை நீலாங்​கரை கபாலீஸ்​வரர் நகரில் வசித்து வரு​கிறார். வீடுகளுக்கு ​உள் அலங்​காரப் பணி​களை மேற்​கொள்​ளும் நிறு​வனத்தை நடத்தி வரு​கிறார் மோகன் குப்தா.

இந்​நிலை​யில், மோகன் குப்​தா​வின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

புதன்கிழமை (ஜூலை 9) காலை சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த ஐந்து அதிகாரிகள், காலை 7 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். பல மணி நேரம் நீடித்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவில்லை.

மேலும், மோகன் குப்தாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

சட்​ட​விரோதப் பணப்​பரிவர்த்​தனை மட்டுமே அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமா என்பது தெரியாத நிலையில், மூத்த நடிகையின் வீட்டில் நடந்துள்ள இச்சம்பவம் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்