ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணுதல் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்றது.
மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தல் விதிப்படி ஒரு வேட்பாளர் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் வேட்பு மனுதாக்கல் செய்தபோது அளித்த வைப்புத்தொகை பணம் திருப்பி வழங்கப்படும். இல்லை என்றால் வைப்புத்தொகையை இழப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 154,657 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால் வைப்புத்தொகை பெற வேண்டுமென்றால் 25,776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் சுமார் 1,904 வாக்குகளில் வைப்புத்தொகையை அவர் இழந்துள்ளார்.