அமோனியா வாயுக் கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி

அமோனியா வாயுக் கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி

2 mins read
5b6c84bb-d324-4880-a92d-ce9c55d1a7b2
அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்​து​வ​மனை​யில் தீவிரக் கண்​காணிப்​பில் உள்​ளனர்.  - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழ்நாட்டின் திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் தனி​யார் மீன் உணவு ஏற்​றுமதித் தொழிற்​சாலை​யின் உற்​பத்திப் பிரி​வில் எதிர்​பா​ராத​வித​மாக அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​ட​தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மாண்ட நால்வரும் பெண்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை நிகழ்ந்த இந்த விபத்​தின் காரணமாக 15 பேர் அரசு மருத்​து​வ​மனை​யில் தீவிரக் கண்​காணிப்​புப் பிரிவிலும், 23 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​விலும் உள்​ளனர். மேலும் 24 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு கண்​காணிப்​பில் உள்​ளனர்.

வாயுக் கசிவு நேர்ந்தபோது அந்தத் தொழிற்​சாலை​யில் ​​அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட வெளிமாநிலத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட120 பேர் இருந்தனர்.

இந்நிலையில், அமோனியா வாயுக் கசி​வால் உயி​ரிழந்த பெண்​களின் குடும்​பத்​தினருக்குத் தலா ரூ.2 லட்​சம் நிதி​யுதவி வழங்​க​வும், விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய மூவர் கொண்ட குழு​வை அமைத்தும் முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாகத் திரு விஜய் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு அறிக்கை வெளியிட்டார்.

மாண்டவர்களின் உடலைச் சொந்த மாநிலத்​துக்கு அனுப்பி நல்​லடக்​கம் செய்ய அரசு செல​வில் நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் அவர் உத்​தர​விட்​டுள்ளார்.

ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் உறு​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாநிலத் தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​துள்​ளார்.

இந்தச் சம்​பவத்​தில் ஏழு பேர் உயி​ரிழந்​த​தாக முதலில் தகவல் வெளி​யான நிலை​யில், தற்போது நான்கு பேர் மட்​டுமே உயி​ரிழந்​த​தாக அதி​கார​பூர்​வ​மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயி​ரிழந்​தவர்​களுக்குப் பிரதமர் நரேந்​திர மோடி, ஆளுநர் அர்​லேகர் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்துள்​ளனர்.

குறிப்புச் சொற்கள்