சென்னை வேதிப்பொருள் கிடங்கில் தீவிபத்து

2 mins read
56b209d1-3a4f-4581-a5b5-342860079267
தீ விபத்​தால் ஏற்பட்ட புகை மண்டலம், அருகேயிருந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளி​யின் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்​தின் ஒரு பகுதி​யினுள் புகுந்​தது. அதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். - படம்: இந்து தமிழ் திசை

ஆவடி: திருமுல்லைவாயில் பகுதியில் ஒரு பள்ளியை ஒட்டியிருந்த வேதிப்பொருள் சேமிப்புக் கிடங்கில், வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பகல் 12 மணியளவில் தீப்பற்றியது.

அந்தக் கிடங்கில் வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

சார்லஸ் என்பவர் நடத்தி வந்த அந்தக் கிடங்கில் திடீரென பற்றி எறிந்த தீ அருகேயுள்ள கட்டடங்களுக்கும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து அம்பத்​தூர் தொழிற்​பேட்டை, ஆவடி, பூந்​தமல்லி, மதுர​வாயல், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதி​களி​லிருந்து எட்டு வாகனங்​களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கிடங்கில் இருந்த வேதிப்பொருள்கள் அனைத்தும் முழுமையாகத் தீக்கிரையாகின.

இந்தத் தீவிபத்​தால் ஏற்பட்ட புகை மண்டலம், அருகேயிருந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளி​யின் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்​தின் ஒரு பகுதி​யினுள் புகுந்​தது. உடனே, அக்கட்​டடத்​தில் இருந்த ஏறக்குறைய 110 மாணவ, மாணவிகளைப் பள்ளி நிர்​வாகத்​தினர் துரிதமாக வெளி​யேற்றினர். இதனால் யாருக்​கும் பாதிப்பு ஏற்பட​வில்லை.

இந்தத் தனியார் பள்ளியில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வேதிப்பொருள் கிடங்கு தீப்பற்றியதையடுத்து, பாதுகாப்புக் கருதி அந்தக் கிடங்குக்கு அருகேயிருந்த கல்வி நிலையங்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தீவிபத்​தால் கிடங்குக்கு அருகேயுள்ள தனியார் பள்ளி வளாகத்​தில் இருந்த 5 சைக்​கிள்​கள், 2 மோட்​டார் சைக்​கிள்கள் தீக்கிரை​யாகின. பள்ளி நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகம், வகுப்​பறை​களில் இருந்த ஆயிரக்​கணக்கான நூல்​கள், 300க்​கும் மேற்​பட்ட மாணவர்​களின் இருக்கைகள் சேதமாயின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்