தேர்தலன்று முதியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்துப் பயணம் இலவசம்

தேர்தலன்று முதியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்துப் பயணம் இலவசம்

1 mins read
620fd1c7-05fe-4f51-9616-21ba84b28d8d
சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளில் மட்டும் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தினத்தந்தி

சென்னை: வாக்களிப்பு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று சென்னை மாநகர் போக்​கு​வரத்துக் கழகம் தெரி​வித்​துள்​ளது.

சாதாரணக் கட்டணங்களைக் கொண்ட பேருந்துகளில் அவர்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படுவதாக அது கூறியுள்ளது.

கட்டணமில்லாப் பயணம் குறித்து மாநகர் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் பிரபு சங்​கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தேர்​தல் ஆணை​யத்​தின் அறி​வுறுத்​தலின்​படி, வாக்குப்பதிவு நாளன்று மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பார்வைக் குறை​பாடு உள்​ளவர்​கள் தங்​களது வாக்​கு​களைச் செலுத்த மாநகர் போக்​கு​வரத்​துக் கழக சாதாரண கட்டணப் பேருந்​துகளில் பயணம் செய்​யும்போது கட்​ட​ணமின்றி பயணம் செய்​ய​லாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அறுபது வயதுக்கு மேற்​பட்ட மூத்​த குடிமக்​கள் வாக்​கு​களைப் பதிவு செய்ய அத்தகைய பேருந்​துகளில் பயணம் செய்​யும்போது வயதுச் சான்று மற்​றும் அவர்​களின் வாக்​காளர் அடை​யாள அட்​டையைக் காண்​பித்​து, கட்​ட​ணமில்லாப் பயணச்சீட்​டை நடத்​துநரிடம் பெற்று பயணம் செய்​ய​லாம்.

“அதேபோல, மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பார்வைக் குறை​பாடு உள்ளவர்​கள் வாக்களிக்கச் செல்லும்போது, யுடிஐடி அட்டை மற்​றும் வாக்​காளர் அடை​யாள அட்​டையைக் காண்​பித்து மாற்​றுத்​திற​னாளி​களுக்கு வழங்​கப்​படும் கட்​ட​ணமில்லாப் பயணச் சீட்​டைப் பெற்று பயணம் செய்​ய​லாம்.

“வாக்களிப்பு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மட்டுமே இந்த இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்,” என்று பிரபு சங்கர் மேலும் தெரி​வித்​துள்​ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்