ஹீமோஃபீலியா நோயாளிகளுக்கு இலவச மருந்து: அமைச்சர் அருண்ராஜ்

ஹீமோஃபீலியா நோயாளிகளுக்கு இலவச மருந்து: அமைச்சர் அருண்ராஜ்

1 mins read
5c2cce7e-8ac6-4023-8f16-760d82020a3b
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்.  - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: ஹீமோஃபீலியா-ஏ நோயாளிகளுக்கு இலவசமாக ‘எமிசிஜீமாப்’ மருந்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி எழுப்பிய கேள்விக்குச் சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் பதில் அளித்தார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் ‘எமிசிஜீமாப்’ மருந்து இந்திய அரசால் இன்னும் சேர்க்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஹீமோஃபீலியா-ஏ மருத்துவப் பயனாளிகளின் ரத்தக் கசிவைத் தடுப்பதில் இம்மருந்து குறிப்பிடத்தக்க மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளதாக அவர் விளக்கினார்.

எனவே, அந்த மருந்தை இலவசமாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்தார்.

சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கையையும் பெரும் பயனையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் இச்சேவை விரைவில் முழுமையாகக் கிடைக்கப் பெறும் என்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்ரத்தம்அமைச்சர்சுகாதார அமைச்சர்