தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகம் முழுவதும் இன்று முழு நேர மின்தடை

2 mins read
a8a1ea95-b5b5-4169-bdb3-51a6b1b5b41f
மின்சார வாரியம். - படம்: கோப்புப்படம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில நாள்களில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது நடைமுறையாகும். இதுதொடர்பாக முறையாக மக்களுக்கு அறிவிக்கப்படும். அதன்படி இன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெரம்பலூர், திருநெல்வேலி, உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மதியம் மற்றும் மாலை வரை மின்தடை செய்யப்படும்.

பெரம்பலூரில் அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர் பகுதிகள்.

திருநெல்வேலியில் தச்சநல்லூர், நல்மெய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை சாலை, திலக் பாக்நாக் நகர், கோமதி நகர், மானூர், தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜா வள்ளிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சன்குளம், தேங்கலம், மாதவ குருச்சி பகுதிகள்.

உடுமலைப்பேட்டையில் தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள மின் சாதனப்பொருட்கள், மற்றும் இதர பொருட்கள் சேதமடையாமல் இருப்பதற்காகவும் உயிர்சேதம் போன்றவற்றை தவிர்ப்பதற்காகவும் இந்த மின்தடை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்