தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பட்டாசு தயாரிப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்’

1 mins read
19690ae0-8f45-4056-a567-c0515dfb2d74
ஜி.கே.வாசன் - படம்: ஊடகம்

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக்கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டும்.

உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். அதற்கு வெடி தயாரிக்கும் நிறுவனத்தினர், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் திருப்பூரில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் 6 வயது சிறுமி தியா, விஜயா, குமார், 9 மாத குழந்தை அலியா செரின் ஆகியோர் பலியாயினர்.

குறிப்புச் சொற்கள்