வேளாங்கண்ணியில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை

2 mins read
b50e509e-4541-4ef4-a456-f364e2e8bfc6
இந்த ஹெலி​காப்​டரில் ஆறு பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும்.  - படம்:இந்து தமிழ் திசை

நாகப்பட்டினம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்க நாகை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அம்மாவட்​டத்​தில் சுற்​றுலாத் துறையை மேம்​படுத்த இந்நடவடிக்​கை உதவும் என மாவட்ட நிர்​வாகம் கூறியது.

டெல்​லியைச் சேர்ந்த ஜெயம் ஏவி​யேஷன் என்ற நிறு​வனத்​துடன் இதற்​கான ஒப்​பந்​தம் போடப்​பட்​டுள்​ளது என்றும் வேளாங்​கண்ணி பேரால​யத்​துக்​குச் சொந்​த​மான இடத்​தில் 10,000 சதுர அடி​யில் ஹெலிபேட் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக வேளாங்​கண்​ணி​யைச் சுற்றி 25 கிலோ மீட்டர் வான் பரப்​பள​வில் ஹெலி​காப்​டரில் சுற்​றிப் பார்க்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்த ஹெலி​காப்​டரில் ஆறு பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும். இந்தப் பயணத்தின்போது வேளாங்கண்ணி பகு​தியைச் சுற்​றிப் பார்க்க பத்து நிமிடங்களுக்கு, ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்​ட​ணம் நிர்​ண​யிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர் பயணத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன் பின்னர் சென்​னை, மதுரை, திருச்சி, பெங்​களூரு போன்ற நகரங்​களில் இருந்​தும் நேரடிச் சேவை வழங்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளதாக ஜெயம் ஏவியேஷன் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சாலை வழி செல்ல ஏறக்குறைய மூன்று மணி நேரமாகிறது. ஹெலிகாப்டர் சேவை தொடங்கியதும் இந்தப் பயண நேரம் 45 நிமிடங்களாகக் குறையும்

தமிழக அரசின் இந்த நடவடிக்கை வெளிநாடு வாழ் இந்​தி​யர்​கள், வெளிமாநிலச் சுற்​றுலாப் பயணி​களுக்கு மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்றும் சுற்றுலாத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சுற்​றுலாப் பயன்​பாட்​டுக்கு மட்​டுமல்​லாமல், பேரிடர் மேலாண்மை, மருத்​துவ அவசரக் காலங்​களுக்​கும் பயன்​படும் வகை​யில் ஹெலிகாப்டர் சேவை வழங்கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்