தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுத் திட்டங்களில் உயிருடன் உள்ள தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை

2 mins read
a4716dc9-aaa1-4bec-ba67-cf154dabad60
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசின் திட்​டங்​களில் ‘உயிருடன் உள்ள’ அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களைப் பயன்​படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆளுங்​கட்​சி​யின் சின்னத்தையோ கொடியையோ, பெயரையோ பயன்​படுத்​தக் கூடாது என்றும் அவ்வாறு பயன்​படுத்​து​வது உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்​கும் தேர்​தல் ஆணைய உத்​தர​வு​களுக்​கும் முரணானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், தமிழக அரசு புதி​தாக தொடங்​க​வுள்ள திட்​டங்​கள், ஏற்​கெனவே தொடங்கி செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களுக்கு எதி​ராக எந்​தவொரு உத்​தர​வை​யும் பிறப்​பிக்​க​வில்​லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

முன்னதாக, தமிழக அரசின் திட்டங்களில் உயிருடன் உள்ள தலைவர்களின் பெயர்களைப் பயன்​படுத்த தடை விதிக்​கக்​கோரி அதி​முக எம்பி சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

தமிழக அரசு தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்​கும் மருத்துவம்’ உள்ளிட்ட சில திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பெயரில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குத் தடை விதிக்கக் கோரியே நீதிமன்றத்தை அணுகினார் அதிமுக எம்பி சண்முகம்.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு உச்ச நீதி​மன்ற உத்​தர​வு​களின்​படி அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள திட்​டங்​கள், புதிதாக தொடங்​கப்​பட​வுள்ள திட்​டங்​களில் தமிழக முதல்​வரின் புகைப்​படத்தை மட்​டும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம் என அனுமதி வழங்கியது.

“தமிழக அரசின் திட்​டங்​களில் இடம்​பெற்​றுள்ள முதல்​வரின் பெயரை நீக்க வேண்​டும். அதே​போல அரசின் திட்​டங்​கள், அதுதொடர்​பான விளம்​பரங்​களில் இடம்​பெற்​றுள்ள திமுக சித்​தாந்த தலை​வர்​களான கருணாநி​தி, அண்​ணா, பெரி​யார் ஆகியோரது பெயர்​களையோ அல்​லது புகைப்​படங்​களையோ பயன்​படுத்​தக் கூடாது,” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவு தொடர்​பாக சில விளக்​கம் தேவை எனக்​கோரி அரசு தலைமை வழக்​கறிஞர் ​ராமன் தலைமை நீதிபதி அமர்​வில் மேல் முறை​யீடு செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்