தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர் விமான இயந்​திரம் வடிவ​மைக்​கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்: ஆய்வாளர் டில்லிபாபு

1 mins read
7aa2ff0c-a89d-47a0-af26-2aaa9e80b366
ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு. - கோப்புப் படம்: ஊடகம்

ஈரோடு: ​போர் விமான இயந்​திரம் தயாரிக்கும் தொழில்​நுட்​பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இடம்பெறும் என இந்​தியப் பாது​காப்​புத் துறையைச் சேர்ந்த ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

50 சோதனைக்​கூடங்​கள் மூலம் விமானங்​கள், ஏவு​கணை, போர்க்​கப்​பல், நீர்​மூழ்கிக் கப்​பல் தரை போர் வாக​னங்​கள் ஆகியவற்றை அந்நாட்டு ராணுவ ஆராய்ச்சி, மேம்​பாட்டு நிறு​வனத்​தின் (டிஆர்​டிஓ) ஆய்வாளர்கள் உரு​வாக்கி வரு​வதாக அவர் சொன்னார்.

போர் விமான இயந்​திரத்தை வடிவ​மைக்​கும் தொழில்​நுட்​பம் உலகில் 4 நாடுகளில் மட்​டும் உள்​ளதாகப் பேசிய அவர், இன்​னும் சில ஆண்​டு​களில் இந்​தியா ஐந்தாவது நாடாக அதில் இடம்​பெறும் என்றார்.

மேலும், தமிழகத்​தில் சென்​னை, திருச்​சி, சேலம், ஓசூர், கோவை ஆகிய நகரங்​களை ஒருங்​கிணைத்து பாது​காப்புத் தொழில்துறை தடம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதை அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்