அமெரிக்கா: 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மூதாட்டியைத் தடுத்து வைத்தது குடிநுழைவுத்துறை

1 mins read
8f17e0c9-557f-4be9-8ff4-91e5328df722
அமெரிக்க குடிநுழைவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 73 வயது இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுரை விடுவிக்கக்கோரி சான்பிரான்சிஸ்கோ வட்டாரத்தின் ஈஸ்ட் பே பகு​தி​யில் ஏறக்குறைய 200 பேர் பதாகை ஏந்தி ஊர்வலம் சென்றனர். - படம்: எக்ஸ்

சண்டிகார்: அமெரிக்காவில் 33 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாகக் குடியேறியதற்காக 73 வயது இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுரை இப்போது அந்நாட்டு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தடுத்து வைத்து அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 1992ஆம் ஆண்டு இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாகாணத்​தில் இருந்து ஹர்​ஜித் கவுர் தனது இரு மகன்​களு​டன் ஈஸ்ட் பே பகு​தி​யில் குடியேறி​னார். சுமார் 33 ஆண்​டு​களாக அவர், சான்பிரான்சிஸ்கோவின் ஈஸ்ட் பே பகு​தி​யில் வசித்து வரு​கிறார். அவரது இரு மகன்​களுக்​கும் திரு​மண​மாகி குழந்​தைகள் உள்​ளன.

இந்நிலையில், அமெரிக்க குடிநுழைவுத் துறை அதி​காரி​கள், சட்டவிரோதமாகக் குடியேறியதாக ஹர்​ஜித் கவுரை கைது செய்​தனர். இதை எதிர்த்துச் சட்​ட ரீ​தி​யாகப் போராட அவரது குடும்​பத்​தினர் முடிவு செய்​துள்​ளனர்.

திருவாட்டி ஹர்ஜித் கவுர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடிநுழைவுச் சோதனைக்குச் சென்று வருகிறார். அவர்மீது இதுவரையிலும் எவ்வித குற்றவியல் புகார்களோ வழக்குகளோ இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

குடிநுழைவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திருவாட்டி ஹர்ஜித் கவுரை விடுவிக்கக் கோரி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (12.9.2025) சான் பேப்லோ டாம் ரோடு பகுதியில் கிட்டத்தட்ட 200 பேர் பதாகைகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஈஸ்ட் பே பகுதி மக்​கள் முழு​வதும் ஹர்​ஜித் கவுருக்கு ஆதர​வாகக் குரல் எழுப்பி வரு​கின்​றனர்.

இந்நிலையில், ஹர்​ஜித் கவுரை விடுவிக்க ரீதியாகப் போராட அவரது குடும்​பத்​தினர் முடிவு செய்​துள்​ளனர்.

குறிப்புச் சொற்கள்