திருச்சி-சிங்கப்பூர் விமானம் இந்தோனீசியாவில் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென கருகிய வாடை வீசியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் இந்தோனீசியாவில் தரையிறங்கியது.

அந்த ‘ஏர்பஸ் ஏ320’ ரக விமானம்  செவ்வாய்க்கிழமை (மே 9) இந்தோனீசியாவில் தரையிறங்கியதும் உரிய பாதுகாப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதற்கட்ட சோதனையின்போது எந்த விதமான பழுதும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் விமானம் தரையிறங்கிய கோலநாமு நகரில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் மாற்று விமானம் மூலம் அவர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இண்டிகோ விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்டபோது அதன் மீது பறவை மோதியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் ஆய்வு நடவடிக்கைக்காக அது இந்தோனீசியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அந்த விமானத்தின் விமானி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியதாக  இண்டிகோ நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!