தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

1 mins read
fb5f16d2-d385-42f6-8994-4d9751b45330
சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள டிஎன் ராஜரத்​தினம் கலை​யரங்​கில், வியாழக்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசும் கமல்ஹாசன். - படம்: ஊடகம்

சென்னை: 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பன பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அக் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து வருகிறார்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பணி​கள் தொடர்​பாக மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ ஹாசன், கட்சி நிர்​வாகி​களை செப்​.18 முதல் 21ஆம் தேதி வரை மண்டல வாரி​யாகச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

அந்தச் சந்திப்புக் கூட்டங்கள் ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள டிஎன் ராஜரத்​தினம் கலை​யரங்​கில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

முதல்​நாள் ஆலோ​சனைக் கூட்​டம் வியாழக்கிழமை தொடங்​கியது. கமல்​ஹாசன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்தக் கூட்​டத்​தில் சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். அவர்​களு​டன் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் ஆ.அருணாச்​சலம், துணைத் தலை​வர்​கள் ஏ.ஜி.மவுரி​யா, ஆர்​.தங்​கவேலு உள்​ளிட்ட நிர்​வாகி​களும் பங்கேற்றனர்.

சென்னை மண்டல கலந்​தாலோ​சனைக் கூட்​டத்​தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் கமல்​ஹாசன், “எத்​தனை மொழிகளை வேண்​டு​மா​னாலும் கற்​றுக்​கொள்​ளுங்​கள். ஆனால், தாய்​மொழியை மட்டும் மறந்​து​வி​டாதீர்​கள். உங்​களால் தீர்க்க முடிந்​ததை மட்​டும் வாக்​குறு​தி​யாகக் கொடுங்​கள். என்னைச் சமூகரீதியாக அடை​யாளப்​படுத்த சிலர் முயற்சி செய்​கிறார்​கள். அதை நான்​தான் சொல்ல வேண்​டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்