சென்னை: பறக்கவிருந்த நிலையில் விமானத்தின் டயர் வெடித்தது

சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையிலிருந்து வியாழக்கிழமை (ஜனவரி 18)130 பேருடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் வெடித்தது.

ஆயினும், பயணிகள் அனைவரும் அவ்விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரவு 12.20 மணிக்குப் பறப்பதற்குத் தயாராக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தபோது எம்எச்181 விமானத்தின் பின்சக்கரம் வெடித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதனையடுத்து, விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளும் விமானப் பணியாளர்களும் சென்னை நகர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.

அவ்விமானம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) காலை புறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!