கோயில் சொத்துகளில் அதிகாரிகள் தவறிழைக்கக்கூடாது: உயர் நீதிமன்றம்

கோயில் சொத்துகளில் அதிகாரிகள் தவறிழைக்கக்கூடாது: உயர் நீதிமன்றம்

1 mins read
ce52112a-dbe6-477c-8acc-5835b209f32f
முறைகேட்டுப் புகாரின்மீது 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழ்நாட்டில் கோ​யில் சொத்​துகளைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும் கடமை​யும் உள்ள அதி​காரி​கள் தவறுசெய்யக் கூடாது என அறநிலை​யத்​துறைக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் அறி​வுரை வழங்​கி​யுள்​ளது.

திருத்​தொண்​டர் அறக்​கட்​டளை தலை​வ​ரான சேலம் ஏ.ரா​தாகிருஷ்ணன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அண்மையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘சென்னை மயி​லாப்​பூரில் உள்ள கபாலீசு​வரர் கோயி​ல் திரு​விழாக்​களின் வரவு - செலவுக் கணக்கு விவரங்​களை இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் தணிக்கைப் பிரிவு அதி​காரி​கள் தணிக்கை செய்து அறிக்கை அளித்​துள்​ளனர்.

அதில் கோயில் நிர்​வாகத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டுள்​ளன. இந்தக் குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பாக பலமுறை புகார் அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே, இதுதொடர்​பாக உரிய விசா​ரணை நடத்த அறநிலை​யத்துறைக்கு உத்​தரவிட வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரரின் புகார் பரிசீலிக்​கப்​பட்டு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என அறநிலை​யத்​துறை தரப்​பில் உறு​தி​யளிக்​கப்​பட்​டது.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிப​தி, ‘‘கோயில் நிர்​வாகத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ளன என அறநிலை​யத்​துறை​யின் தணிக்கைக் குழு குற்​றச்​சாட்டு சுமத்​தி​யுள்​ளது.

“கோயில் சொத்​துகளைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது. எனவே, மனு​தா​ரரின் புகாரை 12 வார காலத்​துக்​குள் பரிசீலித்து சட்​டப்​படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்,’’ என அறி​வுறுத்​தி, வழக்கை முடித்​து வைத்​து உத்​தர​விட்​டார்.

குறிப்புச் சொற்கள்